// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து- 3 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். முந்தைய ஆட்சி காலத்தில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு வழங்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள், ஆயுதங்களை தலிபான்கள் கைப்பற்றி பயன்படுத்தி வருகிறார்கள். 

இந்த நிலையில் அமெரிக்காவின் ராணுவ ஹெலிகாப்டரில் தலிபான்களின் பாதுகாப்பு படையைச் சேர்ந்த குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டனர். தலைநகர் காபூலில் நடந்த இப்பயிற்சியின்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 3 தலிபான்கள் உயிரிழந்தனர்.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்