day, 00 month 0000

உலகிலேயே அதிகளவு காற்று மாசுடைய நகரம் கனடாவில்..வெளியான தகவல்

காட்டுத்தீயின் தாக்கம் காரணமாக உலகிலேயே  அதிகளவு  காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மாண்டிரியல் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த IQAir என்ற நிறுவனம் உலகளவில் காற்றின் தரம் தொடர்பான  தகவலை வெளியிட்டு வருகின்றது. 

இந்நிலையில்,  மாண்டிரியல் நகரில் உலகிலேயே மிக மோசமான அளவில் காற்று மாசுப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

அவ்வாறாக இந்த காற்று மாசுபாட்டினால் மாண்டிரியலில் புகழ் பெற்ற அயர்ன்மேன் டிரையத்தான் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன், திறந்தவெளி விளையாட்டு திடல்கள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையில்,  கனடாவில் காட்டுத்தீ ஏற்பட்ட இடங்களின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்