cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

உக்ரைனிடம் சரணடைந்த ரஷ்யா..! பேச்சுவார்த்தைக்கு தயார்...!புடின் அதிரடி அறிவிப்பு

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.  

அவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமாயின் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதனை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர் புடின் நிபந்தனையும்  விதித்துள்ளார்.

அந்த வகையில்,  மாஸ்கோவில் இராணுவம் தொடர்பான இணையதள பிளாக்கர்களுடன் உரையாடிய புடின், ரஷ்ய ஆயுதங்களின் தரம் தற்போது மேம்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆயினும், டிரோன் மற்றும் துல்லிய தாக்குதல் தொடர்பான ஆயுத தயாரிப்பில் பின்னடைவு  இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அமெரிக்கா வழங்கிய ஹிம்மர் ராக்கெட்டுகள் மூலம் ககோவ்கா அணையை உக்ரைன் தகர்த்துள்ளதாகவும்   புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

மிரளும், எதிர்த்தாக்குதலை தீவிரப்படுத்திய பின்னர்  ரஷ்யாவுடன் ஒப்பிடும் பொழுது  உக்ரைனுக்கு 10 மடங்கு உயிரிழப்பு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்