day, 00 month 0000

சீனாவுக்கு வந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு சிக்கல்?

சீனாவுக்கு வந்த ஆஜர்டினாவின் சிறந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, பீஜிங் துறைமுகத்தில் வைத்து சீன பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

விசா பிரச்சினை காரணமாக மெஸ்ஸியை சீன பொலிஸார் விமான நிலையத்தில் தடுத்து வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

35 வயதான மெஸ்ஸியிடம் இரண்டு ஆஜர்ண்டீனா மற்றும் ஸ்பெயின் நாட்டு கடவுச்சீட்டுகள் உள்ளதாகவும், அவர் ஸ்பெயின் நாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி சீனாவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஸ்பெயின் நாட்டு கடவுச்சீட்டுடன் சீனாவிற்கு வருவதற்கு முன்னர் விண்ணப்பித்த விசாவை வைத்திருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மெஸ்ஸியிடம் முன்பு விண்ணப்பித்த விசா இல்லாததால் இந்த சிக்கல் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்