day, 00 month 0000

தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது

தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என  வேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.  பாஜக அரசின் 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பாஜக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.

அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில்  தமிழக பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வி.கே.சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்ததாவது..

“ காங்கிரஸ் திமுக ஆட்சியில் 12,000 கோடி ரூபாய் ஊழல் நடைப்பெற்றது. பாஜக ஆட்சியில் ஊழல் இன்றி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்று கொண்டு இருக்கிறது. பாஜக அரசு புதிய பாராளுமன்றத்தில் சோழர்களின் செங்கோல் வைத்து சாதனை புரிந்துள்ளது.

உலகில் எந்த நாட்டிற்கு சென்றாலும் பிரதமர் தமிழ் மொழி பற்றியும் இலக்கியத்தை பற்றியும் பேச மறப்பதில்லை. காசி தமிழ்சங்கத்தில் திருக்குறளை 23 மொழிகளில் மொழி பெயர்த்து பிரதமர் வெளியிட்டு தமிழை பெருமைப்படுத்தி உள்ளார். பாஜக அரசு வந்த பிறகு தான் நீட் தேர்வு, சிவில் சர்வீஸ் தேர்வு உள்ளிட்டவை தமிழ் மொழியில் நடைப்பெறுகிறது.

தமிழகத்திற்கு நரேந்திர மோடி கடந்த 9 ஆண்டுகள் 2,47,000 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். அதேபோல கடந்த 9 ஆண்டுகளில்  2,31,000 கோடி ரூபாய் மானியமாக தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 58,000 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.  சென்னை- பெங்களூருக்கு விரைவு பாதை அமைக்க 50,000 கோடி வழங்க்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர், காட்பாடி ,மதுரை ரயில் நிலையங்களை சீரமைக்க 3,500 கோடி வழங்கப்பட்டுள்ளது. 1000 கோடி ரூபாய் செலவில் நெய்வேலியில் புதிய மின் திட்டம் அமைக்க நடவடிக்கை எடுப்பட்டுள்ளது.  84,00,000 லட்சம் குடிநீர் இணைப்புகள் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது. 62,00,000 கழிப்பறைகள் தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

18 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் அங்கம் வகித்த  திமுக ஏன் ஒரு  எய்ம்ஸ் மருத்துவமனையைக்கூட தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை. காங்கிரஸ், மற்றும் திமுக ஊழல் செய்யும் கட்சி.  திமுக 3 தலைமுறையாக குடும்ப ஆட்சி செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் 4 தலைமுறையாக குடும்ப ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. 2024 தேர்தலில் 25 பேர் தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்று செங்கோல் கீழே அமர செய்யுங்கள். 2024 ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில்  25  தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் . வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும். ” என மத்திய உள் அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்