cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

தெற்கு பசுபிக் பிராந்தியத்தில் மீண்டும் பாரிய நிலநடுக்கம்

பசுபிக் பெருங்கடலின் நியூ கலிடோனியா கடற்கரையில் 7.1 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

நியூ கலிடோனியாவின் தலைநகரான நௌமியாவில் இருந்து வடமேற்கே 261 மைல் தொலைவில், சனிக்கிழமை மதியம் (01:51 GMT) சுமார் 22 மைல் (36 கிலோமீட்டர்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி அலைகள் சாத்தியம் என்றும் ஆனால் அவை 1 அடிக்கும் (0.3 மீட்டர்) சிறிய அலைகளை உருவாக்கக் கூடும் என்றும் கண்காணிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக உண்டான சோத விபரங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்