cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

மனித உருவம் கொண்ட ‘ஆப்டிமஸ்’ என்ற ரோபோவை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் செயற்கை நுண்ணறிவு தினத்தை முன்னிட்டு தனது நிறுவனத்தின் புதிய ரோபோ “ஆப்டிமஸ்” ஐ காட்சிப்படுத்தினார்.

கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் உள்ள டெஸ்லா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அறிமுக விழாவில் “ஆப்டிமஸ்” முன்மாதிரி ரோபோ மேடையில் நடந்து அமர்ந்திருந்த பார்வையாளர்களை நோக்கி கை அசைத்தது. அப்போது பேசிய எலோன் மஸ்க் இந்த ரோபோ வணிகமானது அதன் கார்களை விட அதிக மதிப்புடையதாக இருக்கும் எனவும் எங்கள் இலக்கு விரைவில் ஒரு பயனுள்ள மனித உருவ ரோபோவை உருவாக்குவதாகும். ஆப்டிமஸைச் செம்மைப்படுத்தவும் அதை நிரூபிக்கவும் இன்னும் நிறைய வேலைகள் உள்ளன.

சமகாலத்தில் உருவாக்கப்பட்டு வரும் மனித உருவம் கொண்ட ரோபோக்களின் “மூளையைக் காணவில்லை” என்று கூறிய மஸ்க் உலகத்தை தாங்களாகவே பயணிக்கும் புத்திசாலித்தனம் அந்த ரோபோக்களிடம் இல்லை என்று கூறினார். மேலும் அவை மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் குறைந்த அளவில் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு மாறாக, ஆப்டிமஸ் ஒரு “மிகவும் திறமையான ரோபோவாக” இருக்கும். மேலும் மில்லியன் கணக்கான யூனிட்டுகள் தயாரிக்கப்படும் இந்த ஆப்டிமஸ் $20,000 க்குக் குறைவான விலையில் சந்தைப்படுத்தப்படும் எனப் பேசினார்.

எதிர்காலத்தில் ரோபோக்களை வீட்டு வேளைகளுக்குப் பயன்படுத்தப்படலாம். இரவு உணவுகள், தோட்டவேலை மற்றும் முதியவர்களைக் கவனித்துக்கொள்வது மற்றும் மனிதர்களுக்கு “நண்பராக” அல்லது பாலியல் துணையாகக் கூட மாறலாம் என்று மஸ்க் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டெஸ்லாவின் அதிவேக கணினியான டோஜோ பற்றி அவர் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வில் பேசினார். அதில் டெஸ்லா இந்த ஆண்டு முழு வடிவமைப்பை சுய-ஓட்டுதலை அடையும் என்றும், 2024 ஆம் ஆண்டுக்குள் ஸ்டீயரிங் அல்லது பெடல் இல்லாத ரோபோடாக்சியை பெருமளவில் உற்பத்தி செய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்