// print_r($new['title']); ?>
day, 00 month 0000

வேலை நேரத்தில் தூங்குபவர்களின் வசதிக்காக புதிய கண்டுபிடிப்பு

உலகிலேயே நீண்ட நாட்கள் ஆரோக்கிய மான வாழ்க்கையை வாழ்பவர்கள் என்றால் அது ஜப்பானியர்கள் தான் . இந்த மக்களுக்காக பிளைவுட் சப்ளை நிறுவனமான கோயோஜூ ( koyoju ) நிறுவனமும் இடோகி ( itoki ) என்ற பர்னிச்சர் கடையும் சேர்ந்து நேப்பாக்ஸ் ( Nap box ) என்ற ஒரு சாதனத்தைத்தயாரித்திருக்கின்றன .

இதனுடைய ஸ்பெஷல் என்னன்னா , ஒருவர் நின்ற படியே தூங்கிக் கொள்ளலாம் . எதற்கு அந்த நிறுவனம் இப்படி ஒரு கண்டுப்பிடிப்பைக் கண்டு பிடித்திருக்கிறது என்றால், பணி நேரத்தின்போது மனிதர்களுக்கு அவ்வப்போது தூக்கம் வருவது என்பது இயல்பான ஒன்றுதான் .

ஆனால் சிலர் அந்தத் தூக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வார்கள் . கடுமையான வேலைப் பளுவுக்கு இடையே ஒரு நபர் சரியாக 22 நிமிடங்கள் தூங்கினால் , அதன் பின்னர் அவர் செய்யக்கூடிய வேலையில் ஆற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன .

அதனால் பணியாளர்கள்பணி நேரத்தில் தூக்கம் வந்தால் நின்று கொண்டே தூாங்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருப்பதுதான் இந்த நேப் பாக்ஸ்.

இது தொடர்பாக இடோகி நிறுவனத்தின் இயக்குநர் சீகோ கவாஷிமா பேசுகையில் ( Seiko Kawashima ) ஜப் பானில் நீண்ட நேரம் பணிபுரியும் ஊழியர்கள் பணிச்சுமை காரணமாக அவ்வப்போது கழி வறைகளில் குட்டித் தூக்கம் போட்டுவிட்டுத் திரும்பும் பழக்கம் உண்டு .

அது ஆரோக்கியமானது அல்ல என்று கூறியிருக்கிறார்
அதற்கு பதிலாகத்தான் இந்த நேப்பாக்ஸைக் கண்டுபிடித்திருக்கிறோம். . இதனை ஊழி யர்கள் சௌகரியமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இது ஜப்பானியர்களால் நிச்சயம் வரவேற்கப்படும் . அது போல்நிறுவனங்களும் இதனை வாங்கி தங்கள் ஊழியர்களின் பயன்பாட்டுக்குத் தருவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார் . அந்த நேப்பாக்ஸ்க்குள் ஒருவரின் தலை , முழங்கால்கள் மற்றும் முதுகு ஆகியவற்றை சௌகரியமாக வைத்துக்கொண்டு பாதுகாப்பாக இருப்பதற்கும் அந்த நபர் கீழே விழாமல் இருக்கும் வகையி லும் வடிவமைக்கப்பட்டிருக்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்