// print_r($new['title']); ?>
உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் சமூக வலைத் தளமான மெட்டா(Meta) நிறுவனத்திற்கு சொந்தமான வட்ஸ்அப்(WhatsApp), அவ்வப்போது தங்களது செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை குதூகலப்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில் பயனர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த அம்சத்தை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம் குறிப்பிட்ட அரட்டைகளை (Chat) லாக் (Lock) செய்ய பயனர்களை அனுமதிக்கிறது.
கடவுச்சொல்(password)அல்லது கைரேகை ஸ்கேன்(Finger print)போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம்.
அரட்டை பூட்டப்பட்டவுடன், அது ஒரு தனி கோப்புறையில் சேமிக்கப்படும், மேலும் பெயர் மற்றும் செய்தியின் உள்ளடக்கம் அறிவிப்புகளில்(Notification) மறைக்கப்படும். பூட்டிய அரட்டையை அணுக, பயனர்கள் தங்கள் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும் அல்லது அவர்களின் கைரேகை மூலம் அங்கீகரிக்க வேண்டும்.
இந்த புதிய அம்சம் சில உரையாடல்களை ரகசியமாக வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்கு கூடுதல் தனியுரிமையை(privacy) வழங்குகிறது.
யாராவது உங்கள் போனுக்கான அணுகலைப் பெற்றாலும், உங்கள் அனுமதியின்றி அவர்களால் உங்கள் லாக் செய்யப்பட்ட அரட்டைகளைப் படிக்க முடியாது – என்றும் கூறப்படுகிறது.