தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இன்று மாலை முதல் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனுடைய நினைவுதினத்தை அனுட்டிக்க யாழ் நீதிமன்றம் இன்று தடைவிதித்தது. இதையடுத்து, இன்று மாலை முதல் திலீபன் நினைவேந்தல் நடைபெறும் என கருதும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லூரிலுள்ள திலீபனின் நினைவுத்தூபி மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழக பகுதிகளில் அதிகளவான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாளை திலீபனின் நினைவுநாள் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இன்று மாலை முதல் பொலிசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.