விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை விடுதலைப்புலிகளின் தலைவருடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள மகிந்த ராஜபக்ச விருப்பம் வெளியிட்டார் என நோர்வேயின் முன்னாள் விசேடசமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் வடக்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கு அனுமதிப்பதற்கு மகிந்த ராஜபக்ச தயாராகயிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரனுடன் மாநாடொன்றை நடத்துவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக என்னிடம் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார் அவர் பிளவுபடாத இலங்கைக்குள் விடுதலைப்புலிகள் வடக்கில் ஆட்சி செலுத்துவதற்கு அனுமதிப்பதற்கு தான் தயார் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார் என சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது கப்பல்கள் மூலம் பொதுமக்களை வெளியேற்ற நோர்வே முன்வந்தது என குறிப்பிட்டுள்ள அவர் அனைத்து பொதுமக்களையும் விடுதலைப்புலிகளையும் பதிவு செய்யவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம்,அந்த பெயர்களை கொண்டவர்களை கண்டுபிடித்து கப்பல் மூலம் தென்பகுதிக்கு கொண்டு செல்வதற்கான வேண்டுகோளை விடுத்தோம் பிரபாகரன் அதனை நிராகரித்துவிட்டார் என சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.