// print_r($new['title']); ?>
day, 00 month 0000

தயவுசெய்து எங்களை ஆதரியுங்கள்! – மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்வீட்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும், டெல்லி போலீசாருக்கும் இடையே இன்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போலீஸ் சீருடையில் வந்த சிலர் மல்யுத்த வீரர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தங்களின் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்று நமது நாட்டின் பெருமைக்காக நாங்கள் போராடினோம். இன்று எங்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்காக போராடுகிறோம். தயவுசெய்து எங்களை ஆதரியுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்