// print_r($new['title']); ?>
day, 00 month 0000

மொட்டுக்குள் மீண்டும் குழப்பம்...! பீரிஸ் எடுத்த அதிரடி முடிவு

நேற்றையதினம் இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபை சட்டபூர்வமானது அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப் பிட்டார்.

பாராளுமன்ற கடிதத் தலைப்பின் கீழ் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் நேற்றுக் காலை 10 மணிக்கு பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் ஆரம்பமானது.

பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளராக சிரேஷ்ட பேராசிரியர் உத்துராவல தம்மரத்ன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நேற்றையதினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்