// print_r($new['title']); ?>
day, 00 month 0000

நல்லூரில் மாபெரும் உண்ணா நோன்புப் போராட்டம் ஆரம்பம்

தமிழர் மரபுரிமையைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் நல்லை ஆதீன முன்றலில் இன்று அடையாள உண்ணா நோன்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் மக்கள் சார்ந்த தேசிய சக்திகள், சமய சமூக தன்னார்வ அமைப்புக்கள் என பல தரப்புக்கள் இணைந்து குறித்த அடையாள உண்ணா நோன்புப் போராட்டத்தை  ஆரம்பித்துள்ளனர்.

அடையாள உண்ணா நோன்புப் போராட்டத்தின் பிரதான கோரிக்கைகள்,

1. அழிக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ சிலைகள் உடனடியாக மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

2. குருந்தூர் மலை, கன்னியா வெந்நீரூற்று ஆதி சிவன் வழிப்பாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்படுவதுடன் புதிய பௌத்த கட்டுமானம் மற்றும் பௌத்த தொல்லியல் புதிய வர்த்தமானி இரத்து நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.

3. இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

4. மட்டு. மயிலத்தனை மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ் பண்ணையாளர்களின் மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை உறுதிப்படுத்த வேண்டும்.

5. போருக்கு பிந்திய இன மதப் பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட பாரிய குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் அடையாள உண்ணாநோன்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இன்று மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ள இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்து சமய அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்கள், கிறிஸ்தவ மதப் பிரதிநிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பல்வேறுபட்ட தரப்பும் இணைந்துள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்