// print_r($new['title']); ?>
தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மு.க ஸ்டாலின், ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும்.
அத்துடன் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 கடற்றொழிலாளர்களையும் 109 படகுகளையும் விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.