// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஈஸ்டர் தாக்குதலுக்கு யார் காரணம்! சகோதரர்களை இழந்த பிரித்தானிய பிரஜை முன்வைத்துள்ள கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை அறிய விரும்புகின்றேன் என்று குறித்த தாக்குதலில் தனது இரு சகோதரர்களை இழந்த பிரித்தானிய பிரஜை டேவிட் லின்சே தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு சம்பவத்துக்கு யார் உண்மையில் காரணம் என்பதை அறிய விரும்புவதாகவும் தனக்கும் தனது குடும்பத்துக்கும் ஒருபோதும் விடைகள் கிடைக்காது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது சங்கிரிலா ஹோட்டல் குண்டுவெடிப்பில் உயிரிழந்த தனது சகோதரங்களின் பெயரால் இலங்கை மக்களிற்கு ஏதாவது செய்ய விரும்புகின்றேன்.

நான் உண்மையை அறிய விரும்புகின்றேன் அவ்வளவுதான். நான் அரசியல்வாதியோ நீதிபதியோ இல்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெற வேண்டும். அதுவரை எதிர்வுகூறல்கள் சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்