// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இலங்கையில் பல இடங்களில் பூமியதிர்வு - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில் இன்று உணரப்பட்ட நில அதிர்வுகளினால் ஆபத்துக்கள் இல்லையென்றாலும், மக்கள் அவதானமாக இருக்குமாறு புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

பேருவளை கடலில் இருந்து 24 கிலோமீற்றர் தொலைவில் இன்று பிற்பகல் 1.02 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேன இதனை குறிப்பிட்டுள்ளார்.

“இந்த அதிர்வு எங்களின் நான்கு நில அதிர்வு கருவி நிலையங்களிலும் பதிவாகியுள்ளது.

பேருவளையில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் கடலில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது." களுத்துறை, மங்கொன, பேருவளை, பெந்தோட்ட மற்றும் பிலியந்தலை பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் இந்த அதிர்வை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

அத்தகைய நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை. சுனாமியின் அபாய அளவு ரிக்டர் அளவுகோலில் 6.5 அல்லது 7 ஆக அதிகமாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

இலங்கையின் புவியியல் இருப்பிடத்தை எடுத்துக்கொண்டால், ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பிரிக்க முடியாது. இது ஒரு இடம். கடந்த காலங்களில் பதிவான சம்பவங்களை வைத்து எங்கள் நிறுவனம் நீண்ட ஆய்வை நடத்தி வருகிறது.

வரலாற்று ரீதியாக, இந்த பகுதிகளில் அவ்வப்போது சிறிய நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுபற்றி தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை. ஆனால் கவனமாக இருங்கள். ஏதேனும் நிலநடுக்கம் ஏற்பட்டால் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்