// print_r($new['title']); ?>
day, 00 month 0000

தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது ஏன்?; பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை

தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டமைக்கான  விளக்கத்தை பாதுகாப்பு அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.

அத்துடன், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறியே இந்த அமைப்புக்கள் மீது தடை விதிக்கப்பட்டது.தற்போது தடை எதற்காக நீக்கப்பட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதும், தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடை அரசால் நேற்று முன்தினம் நீக்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து  தெரிவித்தபோதே விமல் வீரவன்ச இந்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, அவர் மேலும் கருத்து தெரிவிக்ககையில்,

"6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை எதற்காக நீக்கப்பட்டது? தடை விதிக்கப்பட்டமைக்குக் காரணங்கள் இருந்தன அல்லவா?. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறியே இந்த 6 அமைப்புக்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதனால் தடை நீக்கப்பட்டமைக்கான தெளிவான விளக்கத்தைப் பாதுகாப்பு அமைச்சு கூற வேண்டும். இப்போது அந்தத் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் தணிந்துவிட்டதா? அப்படி இல்லாவிட்டால் தடை நீக்கப்பட்டமைக்கு உண்மையான காரணம் என்ன? அதை அறிந்துகொள்வதற்கான உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு.

என்ன காரணத்துக்காக 6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் முக்கிய தனிநபர்கள் மீதான தடை நீக்கப்பட்டது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். பாதுகாப்பு அமைச்சு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

தடை செய்யப்பட்டிருந்த அமைப்புக்கள் தங்களது நோக்கங்களைக் கைவிட்டிருக்க வேண்டும் அல்லது அந்த அமைப்புக்களால் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்பு இல்லாமல் போயிருக்க வேண்டும். இந்த இரண்டில் எது நடந்தது என்பதை அறியும் உரிமை மக்களுக்கு உள்ளது" . 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்