// print_r($new['title']); ?>
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை கண்டித்து போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை குழப்ப வேண்டாமென தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தின் போது காணமல் போனோரை விடுதலை செய், அரசியல் கைதிகளை விடுதலை செய், வன்முறை வேண்டாம், யாழ்ப்பாணத்தை குழப்பாதே போன்ற கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினார்கள்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மண்டபத்தில் ஒன்று கூடிய போதே குறித்த போராட்டம் இடம்பெற்றது.
இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ் நகரில் ஒன்று கூடியவர்கள் தீடீரென பேரணியாக வந்து ரிம்மர் மண்டபம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.