அடுத்த முறை கழுத்தை அறுத்து, இரத்தம் சிந்தி போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த முறை போன்று ஜனாதிபதி மாளிகைக்கும், தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கும் குதித்து அந்த போராளிகள் மீண்டும் வீட்டிற்கு திரும்ப செல்ல மாட்டார்கள்.
இப்படிப்பட்ட போராட்டம் நியாயமானது. போராட்டக்காரர்கள் வருவதற்குள், நானே எம்மவரின் கழுத்தை அறுப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.