// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இராஜினாமாவை எழுத்துமூலம் அறிவித்தார் முஜிபுர் ரஹ்மான்

கொழும்புத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

முஜிபுர் ரகுமானின் கடிதத்தின் பிரகாரம் 2023ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி முதல் பதவி விலகல் அமுலுக்கு வரும் எனவும் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, முஜிபுர் ரகுமானின் ஆசனம் 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரிவு 64(1) இன் படி வெற்றிடமாக இருப்பதாக தசநாயக்க ,தேர்தல் தலைவருக்கு தெரிவித்தார்.

முஜிபுர் ரஹ்மான் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்