// print_r($new['title']); ?>
புலம்பெயர் தமிழர்களை மகிழ்விக்கும் முயற்சியாகவே கனேடிய அரசு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உட்பட நான்கு பேருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் இலங்கைக்கான கனேடிய பதில் தூதுவருக்கு அறிவித்துள்ளார்.
இவ்வாறான முக்கியமான சந்தர்ப்பத்தில் கனேடிய அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது இருத்தரப்பு நல்லுறவுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர், கனேடிய பதில் தூதுவரிடம் கூறியுள்ளார்.
இலங்கைக்கான கனேடிய பதில் தூதுவரை வெளிவிவகார அமைச்சு அழைத்து அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.