// print_r($new['title']); ?>
day, 00 month 0000

வடக்கிற்கு புதிய ஆளுநர்

வடக்கு மாகாண புதிய ஆளுநராக மலையகத்தைச் சேர்ந்த வர்த்தகரான ராஜகோபால் நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திற்கான ஆளுநராக ஜீவன் தியாகராஜா இருக்கின்ற நிலையில் நாளை மறுதினம் வியாழக்கிழமை புதிய ஆளுநருக்கான நியமனம் வழங்கப்படுமென அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பெடுத்த பின்னர் ஆளுநர்களின் மாற்றம் தொடர்பில் அதிகம் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்