// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கிம் ஜாங் உன்னின் சர்வாதிகார போக்கின் உச்சம் - அமைச்சருக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை

வடகொரியாவின் அமைச்சர் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மரணதண்டனைக்குள்ளான அமைச்சர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டிலேயே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

வட கொரிய அமைச்சர் ரி யோங் ஹோ, ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றிய போது, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை “பொய் ராஜா” என்றும் “அதிபர் ஈவில்” என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இதன் காரணமாகவே வடகொரியாவின் சர்வாதிகாரியாக செயற்படும் அதிபர் கிம் ஜாங் உன் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், ரி யோங்-யின் வெளிப்படையான மரண தண்டனையை வட கொரியாவின் நீண்ட தூர பொலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தின் பாரிய விரிவாக்கத்துடன் இணைத்துள்ளது என ஜப்பான் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

அதேவேளை தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் யூன் குன்-யங், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆட்சியால் ரி யோங் சுத்திகரிப்பு செய்யப்பட்டதை அந்நாட்டின் தேசிய புலனாய்வு சேவை (என்ஐஎஸ்) உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அமைச்சர் தூக்கிலிடப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மரணதண்டனைக்குள்ளான அமைச்சர், கடந்த 2003 முதல் 2007 வரை மேற்கு லண்டனின் ஈலிங்கில் உள்ள வட கொரியாவின் பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றினார். அதன்பின் 2016ம் ஆண்டு வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அத்துடன் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் இடையே சிங்கப்பூரில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ரி யோங் முக்கிய பங்காற்றினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் தொடர்பில் இருந்து ரி யோங் விலகி காணப்பட்ட நிலையில், அணு ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்திய ரி யோங் ஹோ-வுக்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணத் தண்டனையை நிறைவேற்றி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்