// print_r($new['title']); ?>
day, 00 month 0000

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தை செயற்கை காடாக்க முயற்சி

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்ல காணியில் சிறிலங்கா அரச படைகளின் ஆதரவுடன் மரங்களை நாட்டுவதற்காக குழிகளை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் அவை மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவினால் முறியடிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்ல காணியில் மரங்களை நாட்டும் பணிகளுக்காக குழிகளை தோண்டும் பணிகள் அரச படைகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவினர் அங்கு நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டிருந்தனர்.

இதன்போது குழிகளை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்