// print_r($new['title']); ?>
day, 00 month 0000

யாழ் -சென்னை விமான சேவை இன்று முதல் ஆரம்பம்

கொரோனா தொற்று நிலவிய வேளையில் நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சென்னை- இடையேயான விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம் பமாகின்றன.

பலாலி விமானத் தளத்தை இந்தியா சீர மைத்தது. இந்தியாவின் இந்த சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் 2019- இல் விமானவேவை ஆரம்பமானது.

இலங்கையின் 3- ஆவது சர்வதேச விமான நிலையமாக பலாலி அமைந்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று கார ணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட் டிருந்தன.

இந்த நிலையில் யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் இன்று 12- ஆம் திகதி முதல் இந்த விமான சேவை மீண்டும் தொடங்குகிறது.

இந்தியாவின் 'அலையன்ஸ் எயார்' சார்பாக வாரத்துக்கு 4 விமான சேவைகள் நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கான இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட் டுள்ள அறிவிப்பில், இந்திய-இலங்கை மக்களிடையிலான ஆழமான தொடர் புகளுக்கு வழிசமைத்து பொருளாதார செழுமையினை உறுதிப்படுத்தும் வகை யில் சென்னை- யாழ்ப்பாணம் இடை யிலான விமான சேவைகள் டிசம்பர் 12 முதல் ஆரம்பமாகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்