// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கொழும்பில் வலுக்கும் ஆர்ப்பாட்டம்

கொழும்பு - புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்ட பகுதியில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வண்ணம் வீதியில் இறங்காமல் ஏதாவதொரு தனி இடத்தில் போராட்டத்தை முன்னெடுக்குமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

அல்லது போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள், தம்மால் போராட்டத்தை நிறுத்த முடியாது என கூறி தொடர்ந்து வீதியை மறித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீலங்கா டெலிகொம் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா டெலிகொம்மின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக திரண்டுள்ளனர்.

இந்த நிலையில் கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா டெலிகொம்மின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்