// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இலங்கைக்கு சுற்றுலா செல்வதாக இருந்தால் உங்களுக்கு தேவையான மருந்துகளை நீங்கள் கையுடன் எடுத்துச் செல்லுமாறு அமெரிக்க நாட்டு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பிற்கு வெளியே மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதாக கூறியுள்ள அமெரிக்கத் தூதரகம், கொழும்பு நகரில் கூட ஆறு பெரிய மருத்துவமனைகள் மட்டுமே இருப்பதாகவும், அந்த ஆறு மருத்துவமனைகளில் மூன்று மருத்துவமனைகளில் மட்டுமே அவசர சேவைகள் இருப்பதாகவும் தனது நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்