// print_r($new['title']); ?>
day, 00 month 0000

யாழ்.இந்துவில் 62 மாணவர்கள் 9A சித்தி

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.

இவ்வாறு வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் 99 சதவீதம் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனைப்படைத்துள்ளனர்.

அந்த வகையில், பரீட்சைக்கு தோற்றிய 255 மாணவர்களில் 62 மாணவர்கள் 9A சித்திகளையும், 46 மாணவர்கள் 8A சித்திகளையும், 29 மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதேவேளை, 2021, மே 23 முதல் ஜூன் 01 வரை நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை மையங்களில் நடைபெற்ற பரீட்சையில் 517,496 பரீட்சார்த்திகள் தோற்றினர். அவர்களில் 407,129 பேர் பாடசாலை மாணவர்கள் மற்றும் 110,367 பேர் தனிப்பட்ட பரீட்சாத்திகளாவர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்