// print_r($new['title']); ?>
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது.
அதே அதிகாரத்தை கொண்டு நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
நளினி உள்பட 6 பேரும் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதன்போதே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.