// print_r($new['title']); ?>
day, 00 month 0000

2022 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று - மறந்தும் இதை செய்யாதீர்கள்!

இந்த ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சந்திர கிரகணம் நவம்பர் 8 ஆம் திகதி நிகழ உள்ளது. மேஷ ராசியில் உள்ள ராகு உடன் சந்திரன் இணையும் போது கிரகணம் நிகழ்கிறது.

சந்திர கிரகணம் நிகழும் போது சில ராசிக்காரர்களுக்கு தோஷம் ஏற்பட உள்ளதால் அந்த ராசிக்காரர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும். நவம்பர் 8, 2022 செவ்வாய்க்கிழமை அன்று முழு சந்திர கிரகணம் நிகழும். இது 2022 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகும்.

இந்தியா மற்றும் இலங்கையில் பிற்பகல் 2.48 மணிக்குத் தொடங்கி மாலை 06:18 மணிக்கு முடிவடையும். விஞ்ஞானத்தின்படி, சந்திர கிரகணத்தின்போது சந்திரனின் மேல் பூமியின் நிழல் காணப்படுவதால் அது இரத்தம் கலந்த சிவப்பு நிறமாகத் தெரிகிறது.

பொதுவாக கிரகண காலம் தோஷ காலமாக கருதப்படுவதால் சில செயல்களை செய்யக்கூடாது என்று சொல்வார்கள். கிரகணம் தொடங்குவதற்கு 9 மணிக்கு முன்பாகவே கோவில்களை மூடி விடுவார்கள். அதே போல சமைத்த உணவும் தோஷமாக கருதப்படுவதால் கிரகண நேரத்தில் யாரும் சமைக்கக் கூடாது என்பதும் நம்பிக்கை.

சந்திரன் மனோ காரகன் எந்த முக்கிய முடிவும் இந்த நாளில் எடுக்கக் கூடாது என்று சொல்வார்கள். பலரும் குழப்பமான மன நிலையில் இருப்பார்கள். எனவே வர்த்தகம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களை இந்த நாளில் வைத்துக்கொள்ள வேண்டாம். எவரிடமும் கடன் வாங்குவதோ பணம் கொடுக்கல் வாங்கலோ இந்த நாளில் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் கூறுகின்றனர்.

சந்திர கிரகணம் நிகழும் நேரம் பிற்பகல் நேரமாக இருக்கிறது. அந்த நேரத்தில் பயணத்தை தவிர்க்க முடியாது என்றாலும் வாகனங்களில் வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். நிதானம் அவசியம். கிரகணம் உச்சத்தில் இருக்கும் போது வெளியே சுற்றுவதை தவிர்ப்பது நல்லது. இறை தியானத்தில் ஈடுபடலாம்.

கிரகண நேரத்தில் சமைத்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். கர்ப்பிணிகள், வயதானவர்கள், நோயாளிகளுக்கு விதி விலக்கு என்றாலும் சில மணி நேரங்கள் சாப்பிடாமல் தவிர்த்து விடலாம். கிரகண நேரத்தில் மறந்தும் கூட வெளியே சுற்றக்கூடாது. கருவில் இருக்கும் குழந்தையின் நலன் கருதி வீட்டிற்குள் ஜன்னல் கதவுகளை கூட மூடிக்கொண்டு அமர்ந்திருப்பது நல்லது. கிரகணம் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் தண்ணீர் குடிப்பதை கூட தவிர்ப்பது நல்லது.

கிரகணம் நிகழும் போது உறங்கக் கூடாது என்று சொல்வார்கள். அதே போல தாம்பத்ய உறவிலும் ஈடுபடக்கூடாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். கிரகணம் மாலையில் முடிந்து விடும் அதன் பின்னர் வீடு துடைத்து பூஜை அறையில் விளக்கேற்ளி கிரகண கால தோஷங்கள் நீங்க குல தெய்வத்தையும் குல தெய்வத்தையும் வழிபடலாம்.  


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்