// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பாலியல் குற்றச்சாட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தனுஷ்க மீது கடும் நடவடிக்கை

பாலியல் குற்றச்சாட்டில் கைதான இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்கவின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தனுஷ்க குணதிலக்க சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் நாளை திங்கட்கிழமை (7) நீதிமன்றில் குணதிலக்க ஆஜராக வேண்டுமெனவும் சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, நீதிமன்ற நடவடிக்கைகளை சர்வதேச கிரிக்கெட் சபை உன்னிப்பாக கண்காணிக்கும் எனவும் ஐ.சி.சி.யுடன் கலந்தாலோசித்து இது குறித்த விரிவான விசாரணைகளை மேற்கொண்டு தனுஷ்க குணதிலக்கவின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது

தனுஷ்க சிட்னி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, முறைப்பாடுகளை பரிசீலித்த நீதிபதி சந்தேக நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை நிராகரித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்