// print_r($new['title']); ?>
day, 00 month 0000

அமமுக - அதிமுக கூட்டணி பேச்சுக்குப் பின்னால் பாஜக இருக்கிறதா?

"அதிமுகவை மீட்டெடுப்போம், எடப்பாடி பழனிசாமி எனும் துரோகியின் முகத்திரையைக் கிழித்தெடுப்போம்" என்றெல்லாம் வீரவசனம் பேசிக்கொண்டிருந்த டிடிவி.தினகரன், இப்போது, “திமுகவை வீழ்த்துவதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கத் தயார்” என அறிவித்து அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறார். தினகரனின் இந்த திடீர் மனமாற்றத்துக்கான காரணம் என்ன?

ஜெயலலிதா காலத்தில் எஃகுக் கோட்டையாக இருந்த அதிமுகவை, இப்போது ஆளுக்கொரு பக்கமாக பிரித்து பங்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என நான்கு பேருமே, நாங்கள்தான் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி என மார்தட்டுகிறார்கள்.

இதில், தனியாக அமமுகவை நடத்தும் தினகரன், 2019 மக்களவைத் தேர்தலில் 5.46% வாக்குகளை பெற்றார். உள்ளாட்சி தேர்தலிலும் கணிசமான வெற்றியை பதிவு செய்தது அவரது அமமுக. ஆனால், அந்தக் கட்சிக்கு பேரிடியாக அமைந்தது 2021 சட்டப் பேரவைத் தேர்தல்தான். அதில் வெறும் 2.36% வாக்குகளை மட்டுமே அமமுக பெற்றது; டிடிவி.தினகரனால்கூட வெல்ல முடியாமல் போனது. அமமுக ஆரம்பித்தபோது அவருடன் இருந்த முக்கிய தலைகளில், பெரும்பாலானோர் இப்போது திமுக, அதிமுகவில் ஐக்கியமாகி விட்டனர். இனியும் தனித்து களமாடினால் தனது அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும் என்பதால், தனது அரசியல் வியூகங்களை தற்போது மாற்ற ஆரம்பித்துள்ளார் தினகரன். இதன் பின்னணியில் பாஜகவின் அழுத்தமும் சமிக்ஞைகளும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

“மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அதிமுகவுடன் மீண்டும் ஒன்றாக இணைவது என்பது எங்களுக்கும் நல்லதல்ல... அவர்களுக்கும் நல்லதல்ல. எனவே, திமுக எனும் தீயசக்தியை அழிப்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக இருக்கிறோம்” என இறங்கி வந்திருக்கிறார் தினகரன். ஆனாலும் தினகரனையும் சசிகலாவையும் எக்காரணம் கொண்டும் உள்ளேவிடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கும் ஜெயக்குமார் போன்றவர்கள் இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றி இருக்கிறார்கள்.

“மக்களாலும், அதிமுகவாலும் புறக்கணிக்கப்பட்ட சக்திதான் சசிகலாவும், தினகரனும். அதுபோல தொண்டர்களாலும், பொதுமக்களாலும் புறக்கணிக்கப்பட்ட சக்திதான் ஓபிஎஸ். எனவே தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் வேண்டுமானால் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கட்டும். அதிமுகவுடன் கூட்டணி என்பதை அவர்கள் மறந்துவிட வேண்டும். அமமுகவுடன் அதிமுக கூட்டணி வைக்க 100 சதவீதம் வாய்ப்பே இல்லை” என ஆவேசம் காட்டி இருக்கிறார் ஈபிஎஸ் அணியின் பிரச்சார பீரங்கியான ஜெயக்குமார். இப்படி இருக்கையில், அதிமுக - அமமுக கூட்டணி அமையுமா என்பதுதான் இப்போது ஆகப்பெரும் விவாதமாகியிருக்கிறது.

தினகரன் கூட்டணி குறித்து பேசுவது இது முதன்முறை அல்ல. 2021 தேர்தலுக்கு பின்னரே அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பாசிட்டீவான அணுகுமுறையோடுதான் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணி அமைக்கத் தயாராகவே இருந்தோம். ஆனால், ஒரு சிலரின் சுயநலம், பேராசை காரணமாக அது முடியாமல் போனது” என்று முன்பொருமுறை சொல்லியிருந்தார் டிடிவி.

அதேசமயம். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வலுவாக எதிர்த்த தினகரன், இப்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் தயார் என்று சொல்லியிருக்கிறார். அதிமுக, பாஜக கட்சிகளுடன் கூட்டணி வைக்கத் தயார் என்ற தினகரனின் அப்ரோச் கிட்டத்தட்ட பாஜக கொடுத்த யோசனை தான்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்