// print_r($new['title']); ?>
day, 00 month 0000

சிறுவர்களிடையே பரவும் தொற்று; இலங்கையில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொற்று பரவுவதாக சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

காய்ச்சலுடன் அல்லது காய்ச்சல் இன்றி சிறார்களின் கை, கால் மற்றும் வாயைச் சுற்றி சிவப்பு நிறத்தில் தளும்புகள் அல்லது வௌ்ளை நிற கொப்புளங்கள் ஏற்படுவதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

பெற்றோர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

6 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கே இந்த தொற்று ஏற்படுவதால், அவ்வாறான கொப்புளங்கள் மற்றும் தளும்புகள் காணப்படுமாயின் பிள்ளைகளை வௌி இடங்களுக்கு அனுப்பாது சில நாட்கள் வரை வீடுகளில் வைத்திருக்குமாறும் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்