// print_r($new['title']); ?>
day, 00 month 0000

போரில் இறந்தவர்களை நினைவேந்த முடியும், ஆனால்...

போரில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என்று  பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது :

கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் வரும் போது இன ரீதியான , மொழி ரீதியான , மத ரீதியான கருத்து மோதல்கள் வெடிக்கின்றன . அந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார்.

நினைவேந்தல்களை இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அமைதியாகக் கடைப் பிடிக்கவேண்டும் . அந்த நிகழ்வுகள் அரசி யல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாகவோ அல்லது இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டு பவையாகவோ இருக்கக்கூடாது . அதேவேளை , தடைசெய்யப்பட்ட அமைப் புக்களின் கொடிகளைப்பயன்படுத்தியோ அல்லது அந்த அமைப்புக்களுக்கு புகழாரம் சூட்டியோ நினைவேந்தல் நிகழ்வு களைக் கடைப்பிடிக்கமுடியாது . அவற்றை மீறினால் சட்டங்களுக்கமைவாகவே நடவடிக்கை எடுக்கவேண்டிவரும் என்றார் .


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்