// print_r($new['title']); ?>
day, 00 month 0000

'வடக்கில் சீனாவினுடைய ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது'

வடக்கிலே சீனாவினுடைய ஆதிக்கம் என்பதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக சீனாவினுடைய கப்பல் ஒரு சர்ச்சையாக இலங்கையிலே பேசப்பட்டது.

எச்சரிக்கையை மீறி அனுமதிக்கப்பட்ட சீன கப்பல்
இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கின்ற எச்சரிக்கையை மீறி அரசாங்கம் சீன கப்பலை உள்ளே அனுமதித்தது.

தற்போது மீண்டும் சீனாவினுடைய ஆதிக்கம் தொடர்வதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

அந்தவகையிலே வடக்கிலே சீனாவினுடைய பிரதிநிதிகள், அவர்களுடைய முகவர்கள் வடக்கிலே கூடுதலாக களம் இறக்கப்பட்டிருக்கிறார்கள்.

அட்டைப்பண்ணை, இறால் பண்ணை இவ்வாறு அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை அதற்குள்ளே சிக்க வைத்து இந்தியாவிற்கு எதிரானவர்களாக கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்ற ஒரு சந்தர்ப்பத்தை சீனா செய்கின்றது என்பதனை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

ஆகவே அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பினை தமிழர்கள் பாதுகாக்க வேண்டும் என்பது எங்களுடைய கடமையாக இருக்கின்றது. ஏனென்றால் கரையோர பகுதியிலே இருப்பது தமிழர்களே.

சீனாவினுடைய ஆதிக்கம் வடக்கிலே குறிப்பாக கரையோர பிரதேசங்களிலே அவர்களுடைய கால் பதிப்பு என்பதனை அனுமதிக்க முடியாது.

அபிவிருத்தி என்பதனை மேற்கொள்ள வேண்டும் என்றால் அது சீனாவின் முதலீடாக இருக்க கூடாது என்பது என்னுடைய கருத்து.

ஏனைய நாடுகள், ஏன் அயல் நாடான இந்தியாவில் கூட அபிவிருத்தி பணியிலே பண்ணைகளை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகளை செய்யலாம்.

எங்களை பொறுத்தமட்டில் வடக்கிலே சீனாவினுடைய ஆதிக்கம் என்பதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அது இந்தியாவினுடைய பாதுகாப்பினை தமிழர்கள் இன்றும் பாதுகாத்து கொண்டிருக்கின்ற சூழலிலே அதனை சிதைக்கின்ற வாய்ப்பாக கடலோர பகுதிகளிலே சீனாவினுடைய முதலீடுகள் வருவது கண்டிக்கத்தக்கது. அதனை அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்