day, 00 month 0000

மேற்கிந்திய தீவுகள் அணியை துவம்சம் செய்த இந்திய அணி! ஒருநாள் தொடரை வென்று அசத்தல்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் வென்றது மூலம் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்தன.

இந்த நிலையில் ஒருதொடர் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி நேற்று டிரினிடாட்டில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 351 ஓட்டங்கள் குவித்தது.

அந்த அணியின் இஷன் கிஷன் 77 ஓட்டங்களும், சுப்மன் கில் 85 ஓட்டங்களும் குவித்தனர்.

இதையடுத்து 352 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 35.3 ஓவர்களில் 151 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்மூலம் 200 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்று தொடரை 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

ஆட்டநாயகனாக சுப்மன் கில்லும், தொடர் நாயகனாக இஷன் கிஷனும் தேர்வு செய்யப்பட்டனர்.

 
 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்