// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கோட்டாபய மீது தாக்குதல் - சதிவேலையை அம்பலப்படுத்திய பீல்ட் மார்ஷல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது கடந்த 2006 ஆண்டு நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலை எந்த பயங்கரவாத அமைப்பும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் சர்வதேசத்தின் அனுதாபத்தை பெறுவதற்காக முன்னெடுக்கப்பட்ட சதிவேலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குண்டு தாக்குதலை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு பாதுகாப்புச் செயலாளராக, கோட்டாபய ராஜபக்ச செயற்பட்ட போது, அவர் மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலானது, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக எந்தவொரு பயங்கரவாதியும் திட்டமிட்ட இலக்கில் இருந்து 25 மீற்றர் தொலைவில் தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கான வாய்ப்பில்லை, 

இது அப்போதைய ஆளுங்கட்சியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட உள் வேலைத்திட்டமாகும்.

2006 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த குறித்த குண்டுவெடிப்பில் இருந்து கோட்டாபய காயமின்றி உயிர் தப்பினார்.

தாக்குதல் நடந்த உடனேயே, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான அனைத்து 

தொடர்புகளையும் நிறுத்துமாறு, நடுநிலை வகித்து பேச்சுவார்தைகளில் ஈடுபட்டிருந்த  நோர்வே அரசாங்கத்தை இலங்கை கேட்டுக் கொண்டநிலையில் நோர்வே அரசாங்கம் பின்வாங்கிருந்தமையும் குறிப்பிடத்தக்கது


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்