// print_r($new['title']); ?>
day, 00 month 0000

காணாமல்போனோரை தேடிய அதிகாரிகளிற்கு காத்திருந்த அதிர்ச்சி

மெக்சிக்கோவின் மேற்குப்பகுதியில் உள்ள நகரமொன்றில் அதிகாரிகள் மனித எச்சங்கள்அடங்கிய 45 பைகளை அதிகாரிகள் மீட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தவாரம் காணாமல்போன இளைஞர்கள் சிலரை அதிகாரிகள் தேடிச்சென்றவேளை, குவாடலஜரா என்ற நகரில் மனித எச்சங்கள் அடங்கிய பைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அந்த பைகளில் ஆண்களினதும் பெண்களினதும் உடல்கள் காணப்படுகின்றதாக கூறப்படுகின்றது.

மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலப்பகுதி மிகவும் சவாலான ஒன்று என்பதாலும் போதிய வெளிச்சம் இன்மையாலும் தேடுதல் நடவடிக்கைகள் பல நாட்கள் தொடரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏழுபேர் காணாமல்போனமை குறித்த தகவல்களை தொடர்ந்து தேடுதல்களை ஆரம்பித்தவேளை இந்த மனித எச்சங்கள்மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் , பள்ளத்தாக்கில்  மனித எச்சங்களை மீட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதேவேளை மெக்சிக்கோவில் காணாமல்போதல் என்பது நாளாந்தம் இடம்பெறும் விடயமாக மாறியுள்ளது. ஒருஇலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளனர் என அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன,

மெக்சிக்கோ ஜனாதிபதி பெலிப்கால்ட்டிரோன் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை 2007 இல் ஆரம்பித்த பின்னரே காணாமல்போதல் அதிகரித்துள்ளது.

ஆண்களே அதிகளவு காணாமல்போயுள்ள நிலையில் இவர்களில் அனேகமானவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என கூறப்படுகின்றது.

அதேசமயம் காணாமல்போனவர்களின் உறவினர்கள், அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்