// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவின் இடத்திற்கு சாகல..?

ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக சாகல ரத்னாயக்கவை நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய பாதுகாப்பமைச்சின் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன இருக்கும் நிலையில் புதிய பாதுகாப்பமைச்சின் செயலாளராக சாகல நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மேற்கு தொகுதியின் புதிய அமைப்பாளராகவும்  ஜனாதிபதி பணியாளர் குழாமின் பிரதானியாகவும் சாகல ரத்நாயக்க தற்போது பணியாற்றி வருகின்றார்.

இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பாக்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாக அரச நிர்வாக சேவையில் பல மாற்றங்களைச் செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்