// print_r($new['title']); ?>
day, 00 month 0000

சுட்டுரையை முடக்கிவிட்டால் சீமான் தீர்ந்து போவாரா? வைரமுத்து, மு.க.ஸ்டாலின் கண்டனம்

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு வருகிறார். 

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்க்கும் பணியில் அவர் தீவிரமாக இறங்கி உள்ளார்.

அதோடு தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என உறுதியாக தெரிவித்து வரும் சீமான் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் தான் இன்று திடீரென்று சீமானின் ட்விட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. @SeemanOfficial என்ற அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில்,

சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது டுவிட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. டுவிட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல’’ என சீமானின் ட்விட்டர் பக்க முடக்கத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீமானுக்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

அதில், 

சுட்டுரையை முடக்கிவிட்டால் சீமான் தீர்ந்து போவாரா?, வெயிலுக்கு எதிராகக் குடைபிடித்தால் காணாமற் போகுமோ கதிரவன்?, கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்; கை கால்களைக் கட்டாதீர்கள், கருத்துரிமை இன்னும் உயிரோடு இருப்பதாக நம்புகிறவர்களுள்.. நானும் ஒருவன்.. என தனது ட்விட்டரில் பக்கத்தில் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்