// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ரணிலுக்கு பசில் விடுத்துள்ள அவசர கோரிக்கை

அனைத்துக் கட்சி அரசாங்கம் யதார்த்தமானதாக இல்லாவிட்டால் புதிய அமைச்சரவையை கூடிய விரைவில் நியமிக்க வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்களாக இருந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இரவு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு கட்சி கால அவகாசம் வழங்கும்.

எவ்வாறாயினும் அனைத்துக் கட்சி அரசாங்கமும் யதார்த்தமானதாக இல்லாவிட்டால் புதிய அமைச்சரவையை கூடிய விரைவில் நியமிக்க வேண்டும் என பசில்  தெரிவித்துள்ளார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்