// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இராஜதந்திரி கலாநிதி ஜயந்த தனபால காலமானார்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூத்த இராஜதந்திரியான கலாநிதி ஜயந்த தனபால தனது 85 ஆவது வயதில் காலமானார்.

1998 ஆம் ஆண்டு முதல் 2003 வரை ஆயுதக் குறைப்பு விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் துணைச் செயலாளராக அவர் பணியாற்றி இருந்தார்.

மேலும் லண்டன், பெய்ஜிங், வொஷிங்டன் டிசி, புது டெல்லி மற்றும் ஜெனீவாவில் இராஜதந்திர பதவிகளை பெற்றுள்ளார்.

2018-2020 வரை இலங்கையின் அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக பணியாற்றிய அவர், சர்வதேச விருதுகள் மற்றும் கௌரவ டொக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்