// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஐபில் கிண்ணத்தை வெல்லப் போவது யார்?

16-வது ஐபிஎல் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதிப் போட்டிக்கான குவாலிபயர் 2 போட்டியில் மும்பை அணியை 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றதை அடுத்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

பிளே-ஓவ் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற சென்னை அணியை இன்று (28) குஜராத் எதிர்கொள்ளவுள்ளது.

இதன் மூலம் இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்துடன் ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றும்.

குறித்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

போட்டியின் முடிவில் குஜராத் அணி இரண்டாவது முறையாக கிண்ணத்தை வெல்லுமா ? அல்லது சென்னை தன்வசமாக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.


சென்னை சுப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்