19ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவரும் அமைச்சரவைப் பத்திரம் இன்று புதன்கிழமை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, செப்டம்பரில் இரண்டாம் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒக்டோபர் இறுதிக்குள் 20 ஆவது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்றவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் நவம்பரில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு முன்னர் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.