எதிரக் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேக்கும் இடையில் சந்திப்பு ஒன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில், எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
9 ஆவது பாராளுமன்றத்தின் எதிரக் கட்சி தலைவராக சஜித் பிரேமதாச தெரிவாகிய பின்னர் இடம்பெற்ற முதலாவது இராஜதந்திர மட்ட சந்திப்பு இதுவாகும்.